ஆப்நகரம்

மக்களவையில் இது குறித்து பேசுவேன்: தொல்.திருமாவளவன்

தர்மபுரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்ரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் சம்பவ இடத்துக்கு நேரில் வருகை தந்தார்.

Samayam Tamil 27 Oct 2019, 5:40 pm
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியை சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான பிரிட்டோ ஆரோக்கியராஜ் என்பவரது இரண்டரை வயது குழந்தை சுர்ஜித் வில்சன், வீட்டிற்கு அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் நேற்று முன் தினம் (25.10.19) மாலை விழுந்து விட்டார். இதனையடுத்து, சிறுவன் சுர்ஜித்தை மீட்க 49 மணி நேரத்தையும் தாண்டி மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
Samayam Tamil thirumavalavan said he will take this borewell isuues in parliment debate
மக்களவையில் இது குறித்து பேசுவேன்: தொல்.திருமாவளவன்


இதற்காக பல்வேறு முயற்சிகள் கையாளப்பட்டு, அவை தோல்வியில் முடிந்ததால், அடுத்தகட்ட ந்டவடிக்கையாக நிலத்தை வேகமாக துளையிடும் ரிக் என்னும் ராட்சத இயந்திரம் வரவழைக்கப்பட்டு, ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து சுமார் 2 மீ தொலைவில் மற்றுமொரு ஆழ்துளைக் குழி தோண்டப்பட்டு, இதன்மூலம் சிறுவனை மீட்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

குழந்தை சுர்ஜித்திற்காக பிரார்த்திக்கிறேன்: ராகுல் காந்தி

சிறுவன் சுர்ஜித்தை மீட்க, ரிக் இயந்திரம் மூலம், இதுவரை 35 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளது. தற்போது 88 அடியில் குழந்தை இருப்பதால், 98 அடி வரை குழி தோண்டி, பின் பக்கவாட்டில் துளையிட்டு சிறுவனை மீட்க திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு குழுவின் சார்பில் 40 பேரும், மாநில பேரிடர் மீட்பு குழுவின் சார்பில் 30 பேரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சிறிது கூட தொய்வில்லாமல் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சுர்ஜித்தை எவ்வளவு நேரத்தில் மீட்க முடியும்?- ராதாகிருஷ்ணன் விளக்கம்!

அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் அந்த இடத்திலேயே இருக்கின்றனர். மேலும் சில அமைச்சர்களும் சம்பவ இடத்திற்கு வருகை தருகின்றனர். மேலும் முதல்வர் இதுகுறித்து தொலைபேசியில் கேட்டறிந்து கொள்ளுகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், சிதம்பரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பின ரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் சம்பவ இடத்துக்கு நேரில் வருகை தந்தார்.


பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த சம்பவத்துக்கான வருத்தத்தையும், விரைந்து மீட்கப்பட வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார். மேலும் இந்த மாதிரியான ஆழ்துளைக்கிணறு விவகாரங்கள் குறித்து மக்களவையில் தான் நிச்சயம் பேசுவேன் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பாறைகள் இருப்பதால் குழி தோண்டும் பணியில் சிரமம்- மீண்டு வா சுர்ஜித்...!

அரசு, மக்கள், தன்னார்வ தொண்டர்கள் என எல்லாத் தரப்பினரும் முழு ஈடுபாட்டுடன் இயங்கியும் சரியான தொழில்நுட்பம் இல்லாத காரணத்தால் ஒரு குழந்தை 48 மணி நேரமாக போராடிக்கொண்டிருப்பது, வல்லரசு கனவை நோக்கி ஓடும் வேகத்தில் எவ்வளவு தூரம் கண்மூடித்தனமாக அடிப்படையான தொழில்நுட்பத்தைக் கூட மறந்திருக்கிறோம் என்கிறார் வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ரேவதி

தற்போது (5.29 இந்திய நேரம்) இராமநாதபுரத்திலிருந்து மற்றுமொரு இயந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது. தோண்டும் பணி துரிதப்படுத்தப்படுவதற்காக இந்த எந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி