ஆப்நகரம்

திமுக-வை திருமா ஆதரிக்க வேண்டும்: ஈவிகேஎஸ்

எதிர்காலத்தை கருத்தில்கொண்டு திருமாவளவன் திமுகவை ஆதரிக்க வேண்டும் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அழைப்பு விடுத்துள்ளார்.

TNN 19 Mar 2017, 2:22 pm
சென்னை: எதிர்காலத்தை கருத்தில்கொண்டு திருமாவளவன் திமுகவை ஆதரிக்க வேண்டும் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அழைப்பு விடுத்துள்ளார்.
Samayam Tamil thirumavalavan should support dmk in the view of future evks
திமுக-வை திருமா ஆதரிக்க வேண்டும்: ஈவிகேஎஸ்


தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அதனையடுத்து, அவரது தொகுதியான ஆர்கே நகர் தொகுதி காலியானது. தொடர்ந்து, ஆர்கே நகர் தொகுதிக்கு வருகிற ஏப்ரல் மாதம் 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதியில் அதிமுக சசிகலா அணி சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக பன்னீர்செல்வம் அணி சார்பில் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவை சார்பில் தீபா, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் லோகநாதன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஆர்கே நகர் இடைத்தேர்லில் போட்டியிடுவது என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவால் ஏற்பட்ட கருது வேறுபாடு காரணமாக மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் விலகியது. பொது பிரச்னை தொடர்பான போராட்டக் களத்தில் இணைந்து செயல்படுவோம். தேர்தல் களத்தில் தனித்தனியாக செயல்படுவோம் என தெரிவித்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை. யாருக்கும் ஆதரவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்காலத்தை கருத்தில்கொண்டு திருமாவளவன், திமுகவை ஆதரிக்க வேண்டும் என கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அழைப்பு விடுத்துள்ளார்.
Thirumavalavan should support DMK in the view of future: EVKS

அடுத்த செய்தி