ஆப்நகரம்

சென்னை மருத்துவமனையில் திருமுருகன் காந்திக்கு தீவிர சிகிச்சை

மருத்துவர் பரிந்துரையின் பேரில் திருமுருகன் காந்தி சென்னை மருத்துவமனையில் அனுமதி

Samayam Tamil 3 Oct 2018, 4:36 pm
சிறையில் வழங்கப்பட்ட தரமற்ற உணவால் திருமுருகன் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர் எழிலன் நாகநாதன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tmg-admitted-inhospital
திருமுருகன் காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி


வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி 52 நாட்களுக்கு பிறகு நேற்று பிணையில் வெளியே வந்தார். அவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்கோளாறு இருந்து வந்தது.

வயிற்று போக்கு, செரிமானக் கோளாறு, தீவிர அல்சர் உள்ளிட்ட பல பிரச்னைகள் காரணமாக அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதை தொடர்ந்து அவருக்கு நேற்று பிணை வழங்கப்பட்டது.

ஆனால் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணிக்கு மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொண்டார். பின்னர் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் எழிலன், திருமுருகன்காந்திக்கு சிறையில் வழங்கப்பட்ட உணவு தரமில்லாதது. அதனால் கடந்த ஒருமாத காலமாக அவருக்கு வயிறு தொடர்பாக பல பிரச்னைகள் இருந்து வந்தாக கூறினார்.

மேலும், திருமுருகன் காந்திக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் முடிவை வைத்தே திருமுருகன் காந்தி வீடு திரும்புவது பற்றி தெரிவிக்க முடியும் என மருத்துவர் எழிலன் நாகநாதன் தெரிவித்தார்.

அடுத்த செய்தி