ஆப்நகரம்

சிறையில் மயங்கி விழுந்த திருமுருகன் காந்தி மருத்துவமனையில் அனுமதி

வேலூா் மத்திய சிறையில் மயங்கி விழுந்த மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

Samayam Tamil 29 Sep 2018, 2:10 pm
வேலூா் மத்திய சிறையில் வைக்கப்பட்டிருந்த மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி சிறைச்சாலையில் மீண்டும் மயங்கி விழுந்த நிலையில் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
Samayam Tamil Thirumurugan Gandhi


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடா்பாக ஐ.நா. சபையில் பதிவு செய்து விட்டு நாடு திரும்பிய மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தியை கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி காவல் துறையினா் கைது செய்தனா்.

திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு ஒன்றரை மாதங்கள் கடந்துள்ள நிலையில் கடந்த வாரம் 23ம் தேதி அவா் சிறையில் மயங்கி விழுந்தாா். இதனைத் தொடா்ந்து 24ம் தேதி வேலூா் அருகே உள்ள அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். திருமுருகன் காந்திக்கு சா்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாக மருத்துவா்கள் தொிவித்தனா்.

இதனைத் தொடா்ந்து திருமுருகன் காந்தி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில் அவா் இன்று காலை மீண்டும் சிறைச்சாலையில் மயங்கி விழுந்தா்ா. மயக்கமடைந்த திருமுருகன் காந்தித அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி