ஆப்நகரம்

திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் குண்டர்சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

TNN 29 May 2017, 1:32 pm
சென்னை : மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் குண்டர்சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil thirumurugan gandhi arrested in gundas act
திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது


கடந்த மே21-ம் தேதி சென்னை மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு மே 17 இயக்கத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் மாநகரப் போலீசார் அனுமதி வழங்கவில்லை. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தடையை மீறி திருமுருகன் காந்தி தலைமையில் மே 17 இயக்கத்தினரும், வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினரும் பேரணி நடத்த முயன்றனர். அதில் இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த்நிலையில் மே 21-ம் தேதி மெரினாவில் அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தியதாக கூறி 15 பேரை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேரை குண்டர்சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். திருமுருகன் காந்தி, இளமாறன், டைசன், அருண்குமார் ஆகியோரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

மத்திய மாநில அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட 17 வழக்குகள் திருமுருகன் காந்தி மீது நிலுவையில் உள்ளதால் அவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி