ஆப்நகரம்

May 17 Movement: இவர விடாதீங்க; நல்லா விசாரிங்க- நீதிமன்ற உத்தரவுக்கு திருமுருகன் காந்தி இப்படியொரு வேதனை!

நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு பதிலளிக்கும் வகையில், திருமுருகன் காந்தி வேதனை தரும் பதிவை டுவிட்டரில் இட்டுள்ளார்.

Samayam Tamil 11 Jul 2019, 10:54 am
தமிழகத்தின் பல்வேறு மக்கள் விரோத பிரச்னைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர் திருமுருகன் காந்தி. ஈழத் தமிழர் விவகாரத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படக் கூடியவர்.
Samayam Tamil Thirumurugan Gandhi


இதன் காரணமாக திருவல்லிக்கேணி, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றை ரத்து செய்யக் கோரி, நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி சார்பில் 8 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதனை விசாரித்த நீதிபதிகள், மனுக்களை தள்ளுபடி செய்தனர். திருமுருகன் காந்தி நடவடிக்கைகளை பார்க்கும் போது, சந்தேகம் எழுகிறது. காவல்துறை வழக்குத் தொடர் அனைத்து முகாந்திரமும் உள்ளது.

அவர் மீது விரிவான விசாரணை நடத்துங்கள். திருமுருகன் காந்திக்கு பின்னால் யார் இருக்கிறார்கள். அவரை இயக்குவது என்று விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் திருமுருகன் காந்தி மிகவும் வேதனையாக பதிவிட்டுள்ளார்.

அதாவது, என் பின்னணியில் என் மகளை தவிர வேறு யார் இருப்பார்கள். அவளின் உலகம் களவாடப்படுவதை என்னை தவிர வேறு யார் தடுப்பார்கள். அவளின் நீர், நிலம், ஆறு, கடல், காற்று கார்ப்பரேட்டுக்கு விற்கப்பட்டு மாசுபடுவதை அப்பாவாக நான்தானே எதிர்க்கவேண்டும்.

அவள், அவளுடைய தலைமுறையின் உரிமைக்கான முகமே நான் என்று குறிப்பிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி