ஆப்நகரம்

பிரிவினைவாத கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபர் கைது

பிரிவிணைவாத கருத்துகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்த நபரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 20 Oct 2019, 12:53 pm
ராமநாதபுரம்: சமூக வலைதளங்களில் பிரிவிணைவாத கருத்துகளை பதிவிட்டதாக திருமுருகன் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil deeran thirumurugan


ராமநாதபுரம் மாவட்டம் மோர் பண்ணை கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் திருமுருகன் (எ) தீரன் திருமுருகன். இவருக்கு வயது 35. தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்கத்தை நிறுவி மீனவர்களின் பிரச்னைகளுக்கு போராடி வருகிறார். தமிழர் கட்சி என்ற அமைப்புக்கு பொதுச் செயலராகவும் உள்ளார்.

Chennai Rains: 3 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கொட்டப் போகும் பெருமழை- உஷார் மக்களே!

தமிழ்நாடு மீட்பு படை நிறுவனர் தமிழரசனின் கொள்கையை பின்பற்றி வரும் அவரது ஆதரவாளரான இவர், தனித் தமிழ்நாடு கோரும் பிரிவினைவாத கருத்துகளை அவரது முகநூலில் பதிவிட்டு வந்ததாக தெரிகிறது. சமீபத்தில் மதுரை சென்ற திருமுருகன், மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் உள்ள கடைகளில் இந்தி மொழி பெயர் பலகைகளை முற்றிலும் தமிழில் எழுதி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

சத்தம் போடாமல் இரண்டு திட்டங்களை நீக்கிய ஜியோ! ஏன்? எதற்காக?

இது தொடர்பான செய்தி பத்திரிகைகளில் வெளியானது. இதையடுத்து தனி தமிழ்நாடு கோரி கடந்த சில நாட்களாக தனது முகநூல் பக்கத்தில் திருமுருகன் கடுமையான விமர்சன கருத்துகளை பதிவிட்டு வந்ததாக தெரிகிறது.

ஏடிஎம் கார்டு நம்பர் போதும்; உங்க பணம் அபேஸ் - வேலூரில் சிக்கிக் கொண்ட முதியவர்!

இந்நிலையில், மதுரையில் நண்பர் வீட்டில் தங்கியிருந்த திருமுருகனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவாடானை அழைத்து வரப்பட்ட அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி