ஆப்நகரம்

காவிரி நதி நீர் விவகாரம்:நீதிமன்றம் மூலம் தீர்வு காண திருநாவுக்கரசர் வலியுறுத்தல்..!

காவிரி நதிநீர் பங்கீடு குறித்த விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.

TNN 14 Sep 2016, 4:35 pm
காவிரி நதிநீர் பங்கீடு குறித்த விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil thirunavukarasar comment regarding kavery water issue
காவிரி நதி நீர் விவகாரம்:நீதிமன்றம் மூலம் தீர்வு காண திருநாவுக்கரசர் வலியுறுத்தல்..!


தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக தன்னை நியமித்ததற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நன்றி தெரிவித்த அவர்,காங்கிரஸில் உள்ள அனைத்து தலைவர்களையும் ஒருங்கிணைத்து கட்சி வளர்ச்சிக்காக பாடுபடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்த அவர்,வன்முறையை நிறுத்த இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும் காவிரி நதி நீர் பங்கீடு குறித்து இருமாநிலங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளுக்கு நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி