ஆப்நகரம்

கட்டப்பஞ்சாயத்து நடத்தும் பாஜக அரசு: திருநாவுக்கரசர் கடுப்பு

மத்திய அரசு அதிமுக அணிகளை இணைத்து வைக்க கட்டப்பஞ்சாயத்து வேலை பார்ப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

TNN 12 Aug 2017, 9:41 am
மத்திய அரசு அதிமுக அணிகளை இணைத்து வைக்க கட்டப்பஞ்சாயத்து வேலை பார்ப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil thirunavukkarasar slams bjp for interfering admk merger
கட்டப்பஞ்சாயத்து நடத்தும் பாஜக அரசு: திருநாவுக்கரசர் கடுப்பு


அதிமுக துண்டுபட்டதற்குப் பின்னாலும் அக்கட்சியின் மூன்று அணியினரின் அடுத்தடுத்த நகர்வுகளுக்குப் பின்னாலும் பாஜக இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், மத்திய அரசு அதிமுக அணிகளை இணைத்து வைக்க கட்டப்பஞ்சாயத்து வேலை பார்க்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்.

மேலும், "மக்கள் நலனை கருத்தில் கொள்ளாத தமிழக அரசால்தான் நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கவில்லை. தமிழக அரசு மத்திய அரசிற்கு அஞ்சி நடுங்குகிறது. மொத்தத்தில் தமிழக அரசு கோமா நிலையில் கிடைக்கிறது" என்றும் திருநாவுக்கரசர் சாடினார்.

அடுத்த செய்தி