ஆப்நகரம்

ரயில் தடம்புரண்டு விபத்து: கோயம்புத்தூரிலிருந்து ஈரோட்டுக்கு செல்லும் பயணிகள்

TOI Contributor 28 Aug 2016, 9:55 pm
கேரள மாநிலம் எர்னாகுளம் மாவட்டத்தில் உள்ள காருகுட்டியில் மங்களூர் நோக்கி புறப்பட்ட திருவனந்தபுரம் – மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 12 பெட்டிகள் தரம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்நிலையில், கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் கிட்டத்தட்ட எட்டு ரயில்கள் ஈரோடு வழியாக புறப்பட்டு சென்றன.
Samayam Tamil thiruvananthapurammangalore express derailment passengers from coimbatore travel to erode to catch trains
ரயில் தடம்புரண்டு விபத்து: கோயம்புத்தூரிலிருந்து ஈரோட்டுக்கு செல்லும் பயணிகள்


இந்த விபத்து காரணமாக கேரளாவில் இருந்து வரும் ரயில்கள் சேவை தாமதப்படுத்தப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் ரயிலுக்காக காத்துக்கொண்டிருக்கும் பயணிகள் ஈரோடுக்கு புறப்பட்டு சென்றனர். மேலும், திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரி செல்லும் ரயில்கள் ஈரோட்டிலிருந்து, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி வழியாக புறப்பட்டுச் சென்றன. மேலும், இந்த மார்க்கத்திலிருந்து டெல்லி, கோரக்பூர், ஹைதராபாத் மற்றும் பெங்களூர் வழியாக செல்லும் ரயில்கள் திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன.

புதுடெல்லியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் கேரளா எக்ஸ்பிர்ஸ், பெங்களூரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ், ஹைதராபாத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் ஈரோட்டிலிருந்து திருப்பிவிடப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் ரயில்களில் கூட்டம் அதிகரித்து உள்ளது. ஈரோட்டுக்கு திருப்பிவிடப்பட்டுள்ள ரயிலை பிடிப்பதற்கு கோயம்புத்தூரிலிருந்து பயணிகள் ரயில்கள் விடப்பட்டுள்ளன.

இதைப் போல கோயம்புத்தூரிலிருந்து புதுடெல்லி, ஹைதராபாத், பெங்களூர், கோரக்பூர், மும்பை, கவுகாத்தி, மற்றும் தன்பேட் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பயணிகள், இப்போது ஈரோட்டுக்கு திருப்பி விடப்பட்டுள்ள ரயிலை பிடிப்பதற்கு ஈரோட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். ஈரோட்டிலிருந்து அதிகப்படியான ரயில்கள் இயக்கப்படுவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. நீண்ட தூர ரயில்கள் மட்டும் மாற்றி விடப்பட்டுள்ளன. மற்றவை திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய பகுதிகளில் இருந்து இயக்கப்படுகின்றன என்று பாலக்காடு பிரிவு செய்தி தொடர்பாளர் எம்.கே.கோபிநாத் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி