ஆப்நகரம்

மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்று, எதிர்காலத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம்!

சென்னை சேலம் பசுமைவழிச் சாலை திட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரெண்டு எச்சரித்துள்ளார்.

Samayam Tamil 30 Jun 2018, 12:31 pm
சென்னை சேலம் பசுமைவழிச் சாலை திட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரெண்டு எச்சரித்துள்ளார்.
Samayam Tamil SalemExpresswayVillagersProtest750
மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்று, எதிர்காலத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம்!


சென்னை-சேலம் இடையே எட்டு வழி சாலை அமைக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தால் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் கைப்பற்றப்படுவதோடு, தங்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் என்று கூறும் விவசாயிகள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விவசாயிகளின் வாழ்வாதரத்தை பாதிக்கும் பசுமை வழிச்சாலை திட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்றக்கூடாது என்று குரல் எழுப்பிய நடிகர் மன்சூர் அலிகான், சுற்றுசூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ், மாணவி வளர்மதி உட்பட பலர் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

தற்போது பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறந்து விட்டதால் மாணவர்களிடையே போராட்டத்தை பரவ விடாமல் தடுக்கும் வண்ணம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து திருவண்ணாமலையில் மாணவர்கள் நாளை போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இதைதொடர்ந்து, திருவண்ணாமலை போலீஸ்சூப்பிரண்டு பொன்னி, பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களை அழைத்து பேசினார்.

அப்போது, சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம். இந்த தகவலை பரப்பியது மாணவர்கள் கிடையாது. எனவே இந்த போராட்டத்துக்கும், மாணவர்களுக்கும் தொடர்பு இல்லை. போராட்டத்தில் பங்கேற்று படிப்பையும், எதிர்காலத்தையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தார்.

அடுத்த செய்தி