ஆப்நகரம்

மயக்கத்தில் இருந்த காதலிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வீடியோ எடுத்த காதலன்

திருவண்ணாமலையில் பொறியல் பட்டதாரி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் ஒருவரை அம்மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.

Samayam Tamil 9 May 2018, 9:00 pm
திருவண்ணாமலையில் பொறியல் பட்டதாரி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் ஒருவரை அம்மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.
Samayam Tamil thiruvannamalai-movie
காதலிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காதலன்


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீலாந்தாங்கள் கிராமத்தில் வசிக்கும் சங்கர் என்பவர் மகன் பாலாஜி என்கிற தமிழ்ச்செல்வன். இவர் கடந்த 2011-2015 ஆம் ஆண்டு விழுப்புரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்தார்.

அப்போது அதே கல்லூரியில் பயின்ற பெண்ணோடு அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணின் வீட்டிற்கு பாலாஜி சென்றுள்ளார்.

வீட்டில் ஆளில்லாத நேரத்தை பயன்படுத்த எண்ணி வந்த பாலாஜி, மயக்க மாத்திரையை எடுத்து வந்திருக்கிறார். குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து அந்தப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்து படம் பிடித்திருக்கிறார்.

அந்தப் பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகப் போவதை அறிந்து, என்னை திருமணம் செய்யாவிட்டால் அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதற்கு பாலாஜியின் தந்தையும் ஆதரவாக இருந்திருக்கிறார்.

இதனையடுத்து பெண் வீட்டார் வளவனூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி