ஆப்நகரம்

திருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி குழாய் பதிக்கும் முயற்சி; பொதுமக்கள் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தம்!

ஓ.என்.ஜி.சி குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Samayam Tamil 7 Jun 2018, 9:37 pm
திருவாரூர்: ஓ.என்.ஜி.சி குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Samayam Tamil ONGC Pipeline


திருவாரூர் அருகே கூடூர் ஊராட்சி முக்குளம் பகுதியில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் குழாய் பதிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. இந்த குழாய்கள் வெள்ளக்குடியில் தொடங்கி, பல்வேறு கிராமங்கள் வழியாக அடியகமங்கலம் வரை செல்கிறது.

முன்னதாக ஓ.என்.ஜி.சி குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு, விளைநிலங்களில் எண்ணெய் கசிவு ஏற்படுவது தொடர்கிறது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் ஓ.என்.ஜி.சி குழாய்கள் பதிக்க, முசகுளம் கிராமத்திற்கு இயந்திரங்கள் வந்து சேர்ந்தன. அதைக் கண்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குழாய் பதிப்பதால் விளை நிலங்கள் பாதிக்கப்படுகிறது.

அதனால் உங்களை பதிக்க விடமாட்டோம் என்று கூறினர். 50க்கும் மேற்பட்டோர் குழாய் பதிக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர். பின்னர் ஓ.என்.ஜி.சி பணிக்கு வந்த ஊழியர்கள், அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

Thiruvarur people opposed to fix ONGC pipeline.

அடுத்த செய்தி