ஆப்நகரம்

வெயிலில் ஸ்டைலாக மாறிய கோயில் யானை

வெயிலின் தாக்கத்துக்குத் தாக்குப்பிடிக்க கோயில் யானைக்கு இந்து அறநிலையத்துறை நூதன முறையில் பாதுகாப்பு அளித்துள்ளது.

Samayam Tamil 22 May 2018, 9:32 am
வெயிலின் தாக்கத்துக்குத் தாக்குப்பிடிக்க கோயில் யானைக்கு இந்து அறநிலையத்துறை நூதன முறையில் பாதுகாப்பு அளித்துள்ளது.
Samayam Tamil 1rbtb

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருக்கோயில் யானை வெயிலின் தாக்கத்தினால் தவித்து வந்தது. அதற்கு பாதுகாப்பு அளிக்க முடிவு செய்த இந்து சமய அறநிலையத்துறை பிரத்யேகமாக ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

முதலில் யானை குளியல் போட ஷவர் அமைக்கப்படட்டது. பின் அதன் தலைமுடி ‘பாப் கட்டிங்’ செய்யப்பட்டுள்ளது.
செங்கமலம் என்ற அந்த யானை தினமும் ஷவரில் குளியல் போட்டு வெயிலிலின் உஷ்ணத்தைத் தாக்குப்பிடிக்கிறது. யானை ஷவரில் குளிப்பதைப் பார்க்க அப்பகுதி மக்கள் தினமும் வந்த வண்ணம் உள்ளனர்.

அடுத்த செய்தி