ஆப்நகரம்

கருணாநிதியின் திருவாரூர் தொகுதிக்கு டிசம்பரில் இடைத்தேர்தல்..??

இந்தியாவின் 4 மாநிலங்களுக்கு வரும் டிசம்பரில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் போது தமிழகத்தில் காலியாக உள்ள சில தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 12 Aug 2018, 12:22 pm
இந்தியாவின் 4 மாநிலங்களுக்கு வரும் டிசம்பரில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் போது தமிழகத்தில் காலியாக உள்ள சில தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil karunanidhi-by-election
டிசம்பரில் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்..!!


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ-வான போஸ் கடந்த 2ம் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினர்.

இதை தொடர்ந்து, திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த தி முக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி சென்னையில் காலமானார். அவரது உடல் ராஜாஜி அரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிறகு மெரினாவில் அண்ணா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவர்களின் மறைவால் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகள் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், குறிப்பிட்ட தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மரணமடைந்தால் 6 மாதத்திகுள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி.

அதை பின்பற்றி விரைவில் தமிழகத்தின் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

வரும் டிசம்பர் மாதம் மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அப்போது திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என தெரிகிறது.

பொதுவாக இந்தியாவில் காலியாக உள்ள சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தொகுதிகளுக்கு, சட்டமன்ற தேர்தல் நடைபெறும் போது இடைத்தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதை ஓட்டியே திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என தெரிகிறது.

சபாநாயகர் தனபால் தீர்ப்பால் அதிமுக-வின் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க செய்யப்பட்டதால், அவர்களது தொகுதிகளும் கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் அந்த 18 தொகுதிகளையும் காலியிடம் என அறிவிக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அடுத்த செய்தி