ஆப்நகரம்

இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டு வெல்லுவோம் - சீமான்

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 12 Aug 2018, 6:22 pm
சென்னை : திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil naam thamilar seeman


கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது.

அதே போல் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.கே போஸ் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இதனால் திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என தெரிகிறது.

இந்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகுதிகளில் நடத்தப்பட உள்ள இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என சீமான் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி