ஆப்நகரம்

இந்த மாவட்டத்துக்கு மட்டும் கனமழை எச்சரிக்கை!!

வெப்ப சலனம் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Samayam Tamil 11 Sep 2020, 6:13 pm
தென்மேற்கு பருவமழை தொடங்கிய நாள் முதலாக, தமிழகத்தில் அதிக மழை பெய்துவரும் மாவட்டங்களில் நீலகிரி முதலிடத்தில் உள்ளது எனலாம். அந்த அளவுக்கு அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
Samayam Tamil nilgiri


இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன்கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதேபோன்று, கோவை. ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Rains: புரட்டி போடப் போகும் மிகக் கனமழை; தமிழக வானிலை அலர்ட்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகக் கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சேலம், நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தலா 5 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.

அடுத்த செய்தி