ஆப்நகரம்

மாஃபா பாண்டியராஜன் மனமாற்றத்திற்கு இவரும் ஒரு காரணம்!

மாஃபா பாண்டியராஜன் மனமாற்றத்திற்கு இவரும் ஒரு காரணம்!

TOI Contributor 12 Feb 2017, 9:14 am
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஓபிஎஸ் அணி சேர்ந்ததற்கு சமூக வலைதளம் உடன் தானும் ஒரு முக்கிய காரணம் என்று வழக்கறிஞர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil this person is reason for mafoi pandiyarajan mind change
மாஃபா பாண்டியராஜன் மனமாற்றத்திற்கு இவரும் ஒரு காரணம்!


தேமுதிவின் அதிருப்தி எம்எல்ஏவாக மாறி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த மாஃபா பாண்டியராஜனுக்கு ஆவடி தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா சீட் கொடுத்தார். ஆனால் அங்கு அவருக்கு அதிமுக பழைய நிர்வாகிகளால் பல நெருக்கடிகள் தரப்பட்டன. அப்போது உள் விவகாரங்கள் தெரியாமல் திகைத்த பாண்டியராஜனுக்கு வழக்கறிஞர் ராஜாமணி வழிகாட்டியாக இருந்துள்ளார். மேலும் தேர்தலில் வெற்றி பெறவும் உறுதுணையாக இருந்துள்ளார். தொகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்தும் மாஃபா பாண்டியராஜனின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இந்த நிலையில் தான் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்று இரண்டு அணி உருவானது. பாண்டியராஜன் சசிகலா அணியில் இருந்தார். இதற்கு தொகுதி மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனையடுத்து சமூக வலைதளங்கள் மூலம் மக்களின் மனநிலையை அறிந்து கொண்ட மாஃபா பாண்டியராஜன் சசி அணியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு மாறினார். பொதுமக்கள் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதை பாண்டியராஜன் புரிந்து கொண்டாலும், வழக்கறிஞர் ராஜாமணி அப்போதிருந்தே மாஃபா பாண்டியராஜனுக்கு சமூக வலைதளம் மூலம் குறைகளை சுட்டிக்காட்டியும், கருத்துக்களை பகிர்ந்து கொண்டும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி