ஆப்நகரம்

பாவலா காட்டவில்லை... உண்மையாகவே தூய்மை செய்ய களத்தில் இறங்கிய சேலம் ஆட்சியர்

தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் சேலத்தின் பல்வேறு பகுதிகளில் தூய்மை செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார்.

TOI Contributor 24 Sep 2017, 5:27 am
சேலம் : தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் சேலத்தின் பல்வேறு பகுதிகளில் தூய்மை செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார்.
Samayam Tamil thooimaye sevvai plan implemented in salem district
பாவலா காட்டவில்லை... உண்மையாகவே தூய்மை செய்ய களத்தில் இறங்கிய சேலம் ஆட்சியர்


தூய்மையே சேவை இயக்கம் சார்பாக சேலம் மாவட்டத்தில் அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை அம்மாவட்ட ஆட்சியர் ரோகிணி தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். நம்ம ஊர் அரசியல்வாதிகளைப் போல குப்பைகளை அள்ளுவதுபோல பாவலா காட்டவில்லை, அவர்களே சுத்தமான தெருவில் குப்பையை தெளித்து மீண்டும் அள்ள வில்லை.

மாறாக இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பள்ளி சாரண மாணவிகள் மத்தியில் பேசிவிட்டு, களத்திற்கு வந்த ரோகிணி, கையுறையை அணிந்துகொண்டு குப்பைகளை அள்ளும் வேலையில் தானே இறங்கினார். குப்பைகளை எடுத்து குப்பை வண்டியில் போட்டார். இதைப் பார்த்த மற்ற மாணவர்களும் கூச்சப்படாமல் குப்பைகளை அள்ளும் பணியில் ஈடுபட்டனர்.

அடுத்த செய்தி