ஆப்நகரம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: முழு அடைப்பு போராட்டத்தால் வெறிச்சோடிய ரங்கநாதன் தெரு!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராடிய மக்கள் மீது காவல்துறையினர் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சென்னை மாநகரம் முழுவதும் முடங்கியுள்ளது.

Samayam Tamil 25 May 2018, 10:38 am
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராடிய மக்கள் மீது காவல்துறையினர் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சென்னை மாநகரம் முழுவதும் முடங்கியுள்ளது.
Samayam Tamil Tamilnadu_Bandh_Eps (11)
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: முழு அடைப்பு போராட்டத்தால் வெறிச்சோடிய ரங்கநாதன் தெரு!


ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடியில் 144 தடையை மீறி பேரணியாகச் சென்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் தவிர்க்க முடியாத நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில்,துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இப்போராட்டம் காரணமாக, தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை.

மேலும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் இயக்கப்படும் பேருந்துகள், தமிழக - கேரள எல்லையான களியக்காவிளையில் கேரள நிறுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் 4-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதேபோல் புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

இந்த நிலையில் முழு அடைப்பை முன்னிட்டு சென்னையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதால் நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது. ஆங்காங்கே மருந்து கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் டி.நகர் ரங்கநாதன் தெருவில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி காணப்படுகிறது. மேலும் சென்னை நகரில் குறைவான அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு நாடு முழுவதும் கண்டனம் வலுத்துவரும் வேளையில், பொதும்மக்களும், வணிகர்களும் முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி