ஆப்நகரம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 30 May 2018, 1:36 pm
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil madu.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!


தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விசாரணைய தொடங்கியுள்ளனர். மேலும், அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூபாய் 50 லட்சமும் காயமடைந்தோருக்கு ரூபாய் 10 லட்சமும் வழங்கக் கோரி, அகில இந்திய வழக்கறிஞர் சங்க பொதுச்செயலாளர் முத்து அமுதநாதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில் துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான தமிழக அரசின் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி மற்றும் டிஐஜி ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் எனவும் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நாளை மறுநாள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டதோடு, அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்திவைத்து தீர்ப்பளித்தது.

அடுத்த செய்தி