ஆப்நகரம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: மேலும் ஒருவர் பலி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.

TOI Tech 24 May 2018, 8:32 am
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.
Samayam Tamil tuti-01_052318080114


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தபோது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.

தடைகளை மீறி போராட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கானோர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நுழைந்தனர். அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10 பேர் உயிரிழந்துனர். மீண்டும் நேற்று அண்ணாநகரில் போலீசாரின் துப்பாக்கிக்கு மற்றொரு இளைஞர் பலியானார்.

இந்நிலையில், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செல்வசேகர் என்பவர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் 70க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி