ஆப்நகரம்

தட்டார்மடம் கொலை வழக்கு: அதிமுக நிர்வாகி அதிரடி நீக்கம்!

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் கொலை வழக்கில் தொடர்புடைய திருமணவேல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்

Samayam Tamil 21 Sep 2020, 4:53 pm
தூத்துக்குடி மாவட்டம் தட்டான்விளை அருகே உள்ள சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வன் (32). இவர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பக்கத்து ஊரைச் சேர்ந்த அதிமுக வர்த்தக அணி செயலாளர் திருமணவேல் சகோதரரிடம் செல்வன் நிலம் வாங்கியுள்ளதாக தெரிகிறது.
Samayam Tamil திருமணவேல் (இடது), செல்வன் (வலது)
திருமணவேல் (இடது), செல்வன் (வலது)


இது தொடர்பாக திருமணவேலுக்கும், செல்வத்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், செல்வன் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலைக்கு திருமணவேல் மற்றும் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர்தான் முக்கிய காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. இதையடுத்து, திருமணவேல் மற்றும் தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உட்பட 7 பேர் மீது திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது

இதனிடையே, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்துள்ளது. அதேசமயம், நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் உத்தரவின் பேரில், தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கில் சிக்கிய காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஒரு வாய் சோற்றுக்கு கையேந்தும் நிலை: விவசாய சட்டத்தின் பின்னுள்ள ஆபத்து!

திருமணவேல் நீக்கம்


இந்த நிலையில், தட்டார்மடம் கொலை வழக்கில் தொடர்புடைய திருமணவேல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கழக கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து அவரை நீக்கம் செய்து அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

அடுத்த செய்தி