ஆப்நகரம்

எங்களிடம் இருப்பவர்கள் புடம் போட்ட தங்கங்கள்: பன்னீர் பளீர்!!

‘’எங்களிடம் இருப்பவர்கள் புடம் போட்ட தங்கங்கள். ஒரு செங்கல்லைக் கூட யாரும் எங்களிடம் இருந்து எடுத்து செல்ல முடியாது’’ என்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் இன்று தெரிவித்தார்.

TOI Contributor 25 Dec 2017, 2:10 pm
‘’எங்களிடம் இருப்பவர்கள் புடம் போட்ட தங்கங்கள். ஒரு செங்கல்லைக் கூட யாரும் எங்களிடம் இருந்து எடுத்து செல்ல முடியாது’’ என்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் இன்று தெரிவித்தார்.
Samayam Tamil those who are with us all gold says deputy cm pannier selvam
எங்களிடம் இருப்பவர்கள் புடம் போட்ட தங்கங்கள்: பன்னீர் பளீர்!!


ஆர்.கே. நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தோல்வி அடைந்து, சுயேட்சை வேட்பாளர் தினகரன் வெற்றி பெற்றார். இதுகுறித்து ஆய்வு செய்ய இன்று முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுகவின் ஆலோசனைக்கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக்கழகத்தில் நடைபெற்றது.

இதற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பன்னீர் செல்வம் கூறுகையில், ‘’எங்கள் பக்கம் இருப்பவர்கள் யாரும் தினகரன் பக்கம் செல்லவில்லை. எங்களிடம் இருப்பவர்கள் புடம் போட்ட தங்கங்கள். தினகரன் தரப்பு தேர்தல் முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளோம். தினகரன் அரசியலுக்கு வருவதற்கு முன்பே நாங்கள் அரசியலுக்கு வந்தவர்கள். தனக்கு இன்னொரு முகம் இருப்பதாக கூறியவர்தான் இந்த தினகரன். தில்லு முல்லு செய்து தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.

நாங்கள் யாரும் அம்மாவை சந்திக்கவில்லை. அம்மாவுக்கு தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் நாங்கள் அவரை சந்திக்கவில்லை. மருத்துவமனையில் அமைச்சர்கள் யாரும் அம்மாவை சந்திக்கவில்லை.

உறுதியாக சொல்கிறேன் யாரும் எங்களது அணியில் இருந்து ஒரு செங்கல்லைக் கூட எடுத்து செல்ல முடியாது. கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயலலிதாவுக்கு யாரும் வாரிசு இல்லை. ஏன் அவ்வாறு திருமாவளவன் கூறினார் என்று தெரியவில்லை. எனக்கென்று யாரும் இல்லை. உறவு எல்லாம் தமிழக மக்கள்தான் என்று அம்மா பலமுறை கூறியுள்ளார்கள்.

அம்மாதான் உலகத்துக்கே 2ஜி வழக்கை கொண்டு சென்றார்கள். 2ஜி தீர்ப்பு வந்த பின்னர் யார் முதலில் வாழ்த்து கூறினார்கள். தினகரன் தான். அவர்தான் துரோகி. தினகரனும், ஸ்டாலினும் கூட்டணி சேர்ந்தனர். தற்போது ஸ்டாலின் பாவம் டெபாசிட் இழந்து நிற்கிறார்’’ என்றார்.

அடுத்த செய்தி