ஆப்நகரம்

இபிஎஸ் சம்பந்திக்கு கொலை மிரட்டல்: கொத்தாக தூக்கிய போலீஸ்!

எடப்பாடி பழனிசாமியின் சம்பந்திக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Samayam Tamil 15 Jan 2022, 9:35 am
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்திக்கு, பணம் கேட்டு கொலை மிரட்டல் செய்த மூவரை, பெருந்துறை போலீசார் கைது செய்து விசாரித்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Samayam Tamil edappadi palanisamy


பெருந்துறை, சென்னிமலை ரோடு, உழவன் நகரில் குடியிருப்பவர் சுப்பிரமணியன். இவர், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி. இவருக்கு, கடந்த 2021 டிசம்பர் மாதம் 26ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து ஒரே செல் போனில், பல முறை பணம் கேட்டு கொலை மிரட்டல் வந்தது.

இதுகுறித்து, பெருந்துறை காவல் துறையில் சுப்பிரமணியன் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, நேற்று (ஜனவரி 14), சத்தியமங்கலம், பன்னாரி ரோடு, உதயம் நகரைச் சேர்ந்த ரங்கசாமி மகன் பால்ராஜ், 60. சத்தியமங்கலம், தடத்தபள்ளி, இக்கரை, வெள்ளியம்பாளையம்புதூரைச் சேர்ந்த சந்திரன்,48. சத்தியமங்கலம், ராஜீவ் நகரைச் சேர்ந்த நடராஜன் மகன் சீனிவாசன்,41, ஆகியோரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பி அனுப்பப்பட்ட வெல்லம்: பொங்கல் பரிசுத் தொகுப்பு சர்ச்சை!
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய தலை மறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.

அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது முக்கிய டெண்டர்களை அவரது சம்மந்திக்கு ஒதுக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினும் இது தொடர்பான விமர்சனங்களை முன்வைத்தார்.
அதிகரிக்கும் பாதிப்பு: இனி வாரத்தில் இரு நாள்கள் முழு ஊரடங்கு!
அதற்கு எடப்பாடி பழனிசாமி, “டெண்டர் என் உறவினருக்குக் கொடுத்திருப்பதாக சொல்லுகிறார்கள். ரத்த உறவுகளுக்கு மட்டுமே டெண்டர் கொடுக்கக்கூடாது. என் சம்பந்தி ரத்த உறவினர் அல்ல என்பதைத் தெரிவித்து இருக்கிறேன்” என்று மழுப்பலான பதிலை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி