தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை நல்ல மழையை அள்ளித் தந்து சென்றுள்ளது. கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்களில் பெய்தும் மழையும் தமிழகத்தின் தாகத்தை தீர்த்தது.
எவ்வளவு மழை பெய்தாலும் தமிழகத்தின் கடைமடை பகுதிகளுக்கு மட்டும் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. இந்தப் பகுதியில் விவசாயம் செய்வதற்கு மேட்டூர் அணை நீர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
நாட்டரசன் கோட்டை: வயலில் பாடம் படிக்கும் மாணவ, மாணவிகள்!
நடப்பாண்டில் மேட்டூர் அணை சீக்கிரமே நிரம்பியது. இங்கிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்ட தண்ணீர், நாகை மாவட்டத்தை வந்து சேரும் விவசாயிகள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
இதன் காரணமாக சீர்காழி தாலுக்காவில் உள்ள ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி விதைப்பு, நடவு பணிகளை மேற்கொண்டனர். ஆனால் தண்ணீர் வந்து சேரவில்லை.
சீர்காழி, வைத்தீஸ்கரன்கோயில், திருவெண்காடு, எடமணல், மாதானம், மகேந்திரப்பள்ளி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் 50,000 ஏக்கரில் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது.
சுபஸ்ரீ மரணத்திற்கு நியாயம் கிடைக்குமா? ஜெயகோபால் ஜாமீன் மனு மீது விசாரணை!
இதற்கு குடிமராமத்து திட்ட பணிகள் கால தாமதமாக நடைபெறுவதே காரணம் என்று சொல்லப்படுகிறது. மேலும் பாசன ஆறுகளின் வாய்க்கால்களில் பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
புதர்மண்டி கிடக்கும் வாய்க்கால்களை தூர்வாறும் பணிகலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் தண்ணீர் வரும் பாதையில் ஏராளமான தடைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் நாகை மாவட்டத்தில் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
தற்போதைய சூழலை சமாளிக்க கொள்ளிடம் ஆற்று நீரையாவது திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களே உஷார்! மாசா பாக்கெட்டுக்குள் பல்லி!
எவ்வளவு மழை பெய்தாலும் தமிழகத்தின் கடைமடை பகுதிகளுக்கு மட்டும் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. இந்தப் பகுதியில் விவசாயம் செய்வதற்கு மேட்டூர் அணை நீர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
நாட்டரசன் கோட்டை: வயலில் பாடம் படிக்கும் மாணவ, மாணவிகள்!
நடப்பாண்டில் மேட்டூர் அணை சீக்கிரமே நிரம்பியது. இங்கிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்ட தண்ணீர், நாகை மாவட்டத்தை வந்து சேரும் விவசாயிகள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
இதன் காரணமாக சீர்காழி தாலுக்காவில் உள்ள ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி விதைப்பு, நடவு பணிகளை மேற்கொண்டனர். ஆனால் தண்ணீர் வந்து சேரவில்லை.
சீர்காழி, வைத்தீஸ்கரன்கோயில், திருவெண்காடு, எடமணல், மாதானம், மகேந்திரப்பள்ளி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் 50,000 ஏக்கரில் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது.
சுபஸ்ரீ மரணத்திற்கு நியாயம் கிடைக்குமா? ஜெயகோபால் ஜாமீன் மனு மீது விசாரணை!
இதற்கு குடிமராமத்து திட்ட பணிகள் கால தாமதமாக நடைபெறுவதே காரணம் என்று சொல்லப்படுகிறது. மேலும் பாசன ஆறுகளின் வாய்க்கால்களில் பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
புதர்மண்டி கிடக்கும் வாய்க்கால்களை தூர்வாறும் பணிகலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் தண்ணீர் வரும் பாதையில் ஏராளமான தடைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் நாகை மாவட்டத்தில் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
தற்போதைய சூழலை சமாளிக்க கொள்ளிடம் ஆற்று நீரையாவது திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களே உஷார்! மாசா பாக்கெட்டுக்குள் பல்லி!