ஆப்நகரம்

சீறிப் பாய்ந்த மாடுகள்; மாஸ் காட்டிய பந்தயம் - புதுக்கோட்டையில் களைகட்டிய திருவிழா!

திருமயம் அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Samayam Tamil 24 Feb 2020, 11:43 am
தமிழகத்தில் நடைபெறும் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம். குறிப்பிட்ட தூரத்தை முதலில் கடந்து திரும்பி வருவதே பந்தயத்தின் நோக்கம் ஆகும். பொதுவாக கிராமிய தேவதைகளின் வழிபாட்டு விழாவை ஒட்டி இந்த விளையாட்டுகள் நடைபெறும். ஒவ்வொரு வண்டிக்கும் இரண்டு பேர் இருக்கலாம். ஒருவர் வண்டியை ஓட்ட மற்றொருவர் உதவியாளராக பின்னால் அமர்ந்து கொள்வார். இந்த பந்தயங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும்.
Samayam Tamil Rekla


வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நெய்வாசல் திட்டாணிக் கருப்பர் கோவிலில் மஹா சிவராத்திரி உற்சவம் நடைபெற்றது.

இதை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்தப் போட்டியை திருமயம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 32 ஜோடி மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டியில் 10 ஜோடியும், சிறிய மாட்டு வண்டியில் 22 ஜோடியும் என பந்தயம் இரு பிரிவுகளாக நடைபெற்றன.

சசிகலா எங்காளு, ரஜினி உங்காளு: சீமான் எதுக்கு சொன்னார் தெரியுமா?

பெரிய மாட்டு வண்டி பந்தயம் நெய்வாசலில் துவங்கி குன்றக்குடி வரை 12 கிலோ மீட்டர் தூரம் நடந்தது. இதேபோல் சிறிய மாட்டு வண்டி பந்தயம் நெய்வாசலில் தொடங்கி நேமம் வரை 8 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது.

போட்டியை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். இறுதியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு கோப்பை, ரொக்கப் பணம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சார்பில் வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு சில்வர் அண்டா உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.

அடுத்த செய்தி