ஆப்நகரம்

தண்ணீர் லாரி மோதி 3 கல்லூரி மாணவிகள் பலி!

கிண்டியில் கல்லூரி மாணவிகள் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற போது தண்ணீர் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.

TOI Contributor 13 Oct 2016, 3:35 pm
சென்னை : கிண்டியில் கல்லூரி மாணவிகள் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற போது தண்ணீர் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Samayam Tamil three chennai college students die as tanker lorry ploughs into crowd
தண்ணீர் லாரி மோதி 3 கல்லூரி மாணவிகள் பலி!


சென்னை, கிண்டியில் உள்ள செல்லம்மாள் கல்லூரியில் பயின்று வந்த மாணவிகள் 3 பேர் கிண்டி மேம்பாலத்தை இரு சக்கரவாகனத்தில் கடக்க முயன்றனர். அப்போது எதிரே அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி மாணவிகள் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மாணவிகள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்ததாக தகவல் தெரிவிக்கின்றது. காயமடைந்தவர்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் செல்லம்மாள் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு பயின்றுவரும் காயத்திரி, சித்ரா என்ற மாணவிகளும், 3ம் ஆண்டு பயின்றுவரும் ஆயிஷா ஆகிய மாணவிகள் பலியானதாக தகவல் தெரிவிக்கின்றது. விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து கல்லூரியில் சோகம் சூழ்ந்துள்ளது. ஆத்திரமடந்த மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சின்னமலை, கிண்டியில் சாலைபோக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி