ஆப்நகரம்

மூன்று பிள்ளைகளை கொன்று தந்தை தற்கொலை: சென்னை அருகே கொடூர சம்பவம்

தனது மூன்று பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு, தந்தையும் தூக்கில் தொங்கிய கொடூர சம்பவம், சென்னை அருகே நடைபெற்றுள்ளது.

Samayam Tamil 19 May 2020, 1:13 am
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வடமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் ஆறுமுகம் (37). இவரது மனைவி கோவிந்தம்மாள்( 32). இத்தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர்.
Samayam Tamil vadamangalam


இந்த நிலையில், ஆறுமுகம் தனது 12 வயது மகள் ராஜேஷ்வரியை வீட்டில் வைத்து கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, 10 வயது மகள் சாலினி, 7 வயது மகன் சேதுராமன் ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு வயல்வெளி பக்கம் சென்றுள்ளார்.

அங்கு பிள்ளைகள் இருவரின் காலிலும் கல்லை கட்டி கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு, அதே பகுதியில் உள்ள மரத்தில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கணவனுக்கு பிறகு மச்சனன், அதன் பிறகு வேறொருவர்... கடைசியில் போன உயிர்...

சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் நிகழ்வு இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினரும், தீயணைப்பு துறையினரும் கிணத்தில் மிதந்த ஷாலினி, சேதுராமன் ஆகியோரின் உடல்களை கைப்பற்றினர்.

அவர்களின் தந்தை, அக்காள் ஆகியோரின் உடலையும் சேர்த்து நான்கு பேரின் சடலத்தையும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிறந்தநாள் இனிப்பு கொண்டு வந்த பணி பெண்ணுக்கு கிஸ் கொடுக்கும் அலுவலர்..!

இதுதொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி, உதவி காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப பிரச்னை காரணமாக இந்தக் கொடுமையான சம்பவம் நடைபெற்றுள்ளதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி