ஆப்நகரம்

உலக நாத்திகர் மாநாட்டில் ரஜினி மீது தாக்கு

உலக நாத்திகர் மாநாட்டில் பங்கேற்ற கி.வீரமணி ரஜினியின் ஆன்மீக அரசியலைத் தாக்கிப் பேசினார்.

Samayam Tamil 6 Jan 2018, 9:08 pm
திருச்சி: உலக நாத்திகர் மாநாட்டில் பங்கேற்ற கி.வீரமணி ரஜினியின் ஆன்மீக அரசியலைத் தாக்கிப் பேசினார்.
Samayam Tamil three day world atheist conference begins in trichy
உலக நாத்திகர் மாநாட்டில் ரஜினி மீது தாக்கு


திருச்சி பெரியார் மணியம்மை பள்ளியில் நடக்கும் உலக நாத்திகர் மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் திராவிர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தலைமை ஏற்று பேசினார். அவர், “இது கடவுள் மறுப்பு மட்டுமல்ல. மனித குலத்தின் உரிமைகளை சட்ட ரீதியாக மீட்டெடுக்க இருக்கும் ஒரே நம்பிக்கை நாத்திகம்.” என்று குறிப்பிட்டார்.

மேலும், “சமூகத்தில் நிலவும் தீண்டாமைகளுக்கும், சாதிய கொடுமைகளுக்கும் எதிரானது. நாத்திகம் என்பது அனைத்து செயல்களையும் அறிவியல் ரீதியாக அணுகக்கூடியது. ஏன், எதற்கு என்ற கேள்வி மூலம் உண்மையை தெரியப்படுத்து வதாகும். இந்தியாவில் நிலவிய சாதிய தீண்டாமைகளை வேரோடு அகற்ற பெரும் முயற்சி செய்தவர் பெரியார். அது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.” என்று கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவும் இம்மாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்றார். அவர் பேசும் போது, “முருகன் பக்தர்கள் குடும்பத்தில் நான் பிறந்தேன். 12வயதில் எனக்குள் கடவுள் நம்பிக்கை போய்விட்டது. அப்போதே நான் பெரியாரின் பேச்சுகளை கேட்டேன், அந்த பேச்சுகள் குறித்து எனது தந்தையிடன் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை. அப்போதே எனக்குள் நாத்திக கொள்கையை விதைத்து விட்டார்கள். திகார் ஜெயிலுக்கு போனபோது நாத்திக கொள்கை பல மடங்கு அதிகமானது. நாத்திக கொள்கைகள் தான் நம் நாட்டை வருங்காலங்களில் காப்பாற்றும்” என்று பேசினார்.



தொடக்க விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி ரஜினியின் ஆன்மிக அரசியல் பற்றி பற்றி கருத்து கூறினார். “ஆத்மா என்பது பித்தலாட்டம். அதனுடைய தமிழ் வார்த்தை தான் ஆன்மா. இல்லாத ஒன்றை நடத்துகிறோம் என்பது எவ்வளவு புரட்டு.” என்றார்.

அடுத்த செய்தி