ஆப்நகரம்

சசிகலாவுக்கு எதிராக சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்

சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

TNN 27 Dec 2016, 3:22 am
சென்னை: சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
Samayam Tamil three days huger strike against sasikala satta panchayat iyakkam
சசிகலாவுக்கு எதிராக சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, ஆளும் கட்சியின் தலைமை பொறுப்பேற்பது மற்றும் முதல்வர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினர், மூன்று நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்த போராட்டம், சென்னை தி.நகரில் உள்ள சட்ட பஞ்சாயத்து இயக்க அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதியன்று காலமானார். அதனையடுத்து, தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். எனினும், அக்கட்சியை வழிநடத்தி செல்லப்போவது யார் என்பன உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தது.

மேலும், அதிமுக-வின் சக்திவாய்ந்த பொறுப்பான அக்கட்சியின் பொதுச்செயலாளர் இதுவரை தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதேசமயம், ஜெயலலிதாவின் தோழியும் அக்கட்சியினரால் சின்னம்மா என்றழைக்கப்படும் சசிகலா, அதிமுக-வின் பொதுச் செயலாளராக வரவேண்டும் என அக்கட்சியினர் பலரும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர்.

அதேசமயம், அதிமுக-வில் சிலர் உள்பட அதிமுக தலைமை மற்றும் முதல்வர் பொறுப்புக்கு சசிகலா வரக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Three days huger strike against Sasikala: Satta panchayat iyakkam

அடுத்த செய்தி