ஆப்நகரம்

அரியலூர் அருகே பயங்கரம் - வேன் மீது கார் மோதியதில் 3 பேர் பலி!

கார் மற்றும் வேன் மோதிக் கொண்ட விபத்தில் மூவர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

TIMESOFINDIA.COM 1 May 2019, 8:10 pm
அரியலூர் மாவட்டம் மெய்க்காவல்புதூர் அருகே இன்று அதிகாலை கார் ஒன்று வேன் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே மூவர் பலியாகினர். அவர்கள் சஞ்சய்(19), பிரபாகரன்(18), நித்யானந்தம்(22) ஆவர்.
Samayam Tamil Accident


இவர்கள் அனைவரும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த சேத்தியாத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள். ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோவிலுக்குச் சென்று, சாமி தரிசனம் செய்து விட்டு சொந்த ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்பைத் தாண்டிச் சென்று எதிர் திசையில் வந்த வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேனில் வந்த 15 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர்கள். அனைவரும் புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

காயமடைந்தவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி