ஆப்நகரம்

ஹோட்டல் சுவர் இடிந்து, சாப்பிட்டு கொண்டிருந்தவர் பலி

சேலம் அருகே மழையால் ஹோட்டல் சுவர் இடிந்து விழுந்ததில் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த வாடிக்கையாளர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

Samayam Tamil 20 May 2018, 11:06 am
சேலம் அருகே மழையால் ஹோட்டல் சுவர் இடிந்து விழுந்ததில் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த வாடிக்கையாளர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
Samayam Tamil salem345445-1526791184


சேலத்தில் சனிக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. அப்போது, நெய்க்காரப்பட்டி அருகே உள்ள ஹோட்டல் ஓன்றில் அமைக்கபட்டிருந்த அலங்கார சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

இதில் ஹோட்டலில் இருந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஈரோட்டை சேர்ந்த நூருல் அமீது என்ற வாடிக்கையாளர். மற்ற இருவரும் ஹோட்டலின் பணியாற்றிய ஊழியர்கள்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர். போதிய பாதுகாப்பு வசதியில்லாத கட்டிடம்தான் விபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது.

அடுத்த செய்தி