ஆப்நகரம்

வாணியம்பாடி சாலையில் ஏற்பட்ட விபத்தில் 3 வாடகை கார் ஓட்டுநர்கள் உயிரிழப்பு

வேலூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் வாடகை கார் ஓட்டுநர்கள் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், அவர்களுடன் காரில் வந்த இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Samayam Tamil 26 Feb 2019, 10:44 pm
வேலூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் வாடகை கார் ஓட்டுநர்கள் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், அவர்களுடன் காரில் வந்த இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Samayam Tamil சாலை விபத்தில் வாடகை கார் ஓட்டுநர்கள் 3 பேர் மரணம்


வாணியம்பாடி அருகேவுள்ள களேந்திரா சாலை பகுதியில் வந்த கார், அங்கியிருந்த மரம் மீது மோதியது. இதில் சென்னையில் கார் ஓட்டுநர்களாக பணியாற்றி வந்த ஜானகிராமன் (25), சிவா (25) மற்றும் பிரகாஷ் (26) உள்ளிட்டோர் உயிரிழந்தனர். சுப்பிரமணி (26) மற்றும் உமாபதி (25) ஆகியோர் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தனர்.

அவர்களை மீட்ட அக்கபக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்கள் அனைவரும் சென்னை மௌலிவாக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. ஏலகிரி சென்றுவிட்டு சென்னை திரும்பிக்கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காரை உமாபதி ஓட்டிவந்த நிலையில், அவர்களுடன் வந்த மற்றொரு கார், வேறொரு வாகனத்தை இடிக்கும் விதமாக சாலையில் சென்றுள்ளது. அதை நகர்ந்து போகும் படி சொல்ல முயல, எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற கார் சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில், உள்ளூர் கிராமவாசிகள் உதவியுடன் உடல்களை மீட்டு வாணியம்படி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி