ஆப்நகரம்

விழுப்புரம்: கிளி, குருவி கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது

விழுப்புரம் மாவட்டத்தில், கிளி, குருவிகளை கடத்திவந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

TNN 21 Mar 2016, 7:26 pm
விழுப்புரம் மாவட்டத்தில், கிளி, குருவிகளை கடத்திவந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
Samayam Tamil three held for smuggling rose ringed parakeets munias in tamil nadu
விழுப்புரம்: கிளி, குருவி கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது


டிராஃபிக் என்ற அமைப்பு, திருச்சியில் இருந்து, திருவெண்ணெய்நல்லுர் வழியே, விழுப்புரத்திற்கு ஏராளமான பச்சைக்கிளிகள் மற்றும் குருவிகள் கடத்தப்படுவதாக, விழுப்புரம் மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்தது. இதன்பேரில், விழுப்புரம் பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில், மாவட்ட வனத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அதில் மூங்கில் கூடைகளில் 85 பச்சைக்கிளிகள்,80 நெல்லுக்குருவிகள் அடைத்துவைக்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, ஆட்டோவில் வந்த வெற்றிவேல்,ராஜதுரை மற்றும் உடந்தையாகச் செயல்பட்ட ஆட்டோ டிரைவர் ஹரிகிருஷ்ணன் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திருச்சியை சேர்ந்த நரிக்குறவர்களிடம் இருந்து, இந்த கிளிகள் மற்றும் குருவிகளை வாங்கிவந்ததாக, அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி, வனத்துறையினர் தீவிர விசாரணை மேறகொண்டுள்ளனர். வன உயிரின பாதுகாப்புச் சட்டப்படி, பச்சைக்கிளிகள்,நெல்லுக்குருவி கடத்தல், தடை செய்யப்பட்ட குற்றமாகும்.

அடுத்த செய்தி