திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அளிக்க விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படை போலீசார் சென்றிருந்தனர். அவரது நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து, ஆயுதப்படை போலீசார் தங்கள் வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
விழுப்புரம் அருகே புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது எதிர்பாராதவிதமாக போலீசார் வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் ஏ.ஆர்.கான்ஸ்டபிள் சரவணன் கைது செய்யப்பட்டார்.
மேலும் அவரை பணியிடை நீக்கம் செய்து, விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமாரி உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசாரே, அவர்கள் மீது தாறுமாறாக வாகனம் ஓட்டி உயிரைப் பறித்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது எதிர்பாராதவிதமாக போலீசார் வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் ஏ.ஆர்.கான்ஸ்டபிள் சரவணன் கைது செய்யப்பட்டார்.
மேலும் அவரை பணியிடை நீக்கம் செய்து, விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமாரி உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசாரே, அவர்கள் மீது தாறுமாறாக வாகனம் ஓட்டி உயிரைப் பறித்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.