ஆப்நகரம்

ஆம்பூரில் அவசரமாக தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 3 பேர் பலி

ரயில் செல்லும் வரை காத்திருக்க பொறுமை இல்லாமல், மூவரும் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்கள். அப்போது ரயில் அவர்கள் மீது மோதிச் சென்றதில், மூவரும் உடல் சிதறி பலியானார்கள்.

Samayam Tamil 5 May 2019, 11:04 am
வேலூர் ஆம்பூர் ரயில் நிலையத்தில் இன்று தண்டாவாளத்தைக் கடக்க முயன்றபோது, 3 பேர் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர்.
Samayam Tamil asssdsdsdsdd


வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையம் தினமும் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடமாகும். பொதுவாக இங்கு ரயில்வே கேட் இருந்தும்கூட விதிகளை மீறி தண்டவாளத்தில் இறங்கி கடப்பது வாடிக்கையாக உள்ளது.

இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், விதிமீறல் நீடித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று மூன்று பேர் ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தை கடக்கும் முயன்றபோது, ரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர்.

வேலூர் நோக்கி சென்று கொண்டு இருந்த எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் வரை காத்திருக்க பொறுமை இல்லாமல், மூவரும் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்கள். அப்போது ரயில் அவர்கள் மீது மோதிச் சென்றதில், மூவரும் உடல் சிதறி பலியானார்கள்.

பலியானவர்கள் ஆம்பூரை சேர்ந்த சங்கர், பானுமதி, மற்றும் 11 வயது சிறுவன் நித்திஷ் ஆகியோர் என அடையாளம் தெரிந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

அடுத்த செய்தி