ஆப்நகரம்

ஸ்ரீரங்கத்தில் 3 மாத ஆண் குழந்தை கடத்தல்; போலீசார் தீவிர விசாரணை!

திருச்சி: 3 மாத ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Samayam Tamil 6 Dec 2018, 7:54 pm
திருச்சி ஸ்ரீரங்கம் ஈ.பி.ஆபிஸ் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்(22). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மாரா என்ற ஒன்றரை வயது குழந்தையும், 3 மாத ஆண் குழந்தையும் இருக்கிறார்கள்.
Samayam Tamil Kidnap


இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 3 மணியளவில் எழுந்து பார்த்த போது, ஆண் குழந்தையை காணவில்லை. இதனால் மாணிக்கம் மற்றும் அவரது மனைவி அதிர்ச்சியடைந்தனர்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடினர். ஆனால் குழந்தை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் காவல் ஆய்வாளர் உமாசங்கர் வழக்குப்பதிவு செய்து, குழந்தையை கடத்திய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடி‌வி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி