ஆப்நகரம்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: மேலும் 3 பேர் கைது; கைது எண்ணிக்கை 12ஆக உயர்வு

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் மூன்று பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் கைது எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது

Samayam Tamil 27 Jan 2020, 7:02 pm
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் மூன்று பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகம் முழுவதும் குரூப் 4 பதவிகளுக்கான பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே, தேர்வாணையம் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார், முறைகேடு தொடர்பாக டிபிஐ வளாகத்தில் இயங்கிவரும் பள்ளிக்கல்வித்துறை அலுவலக பணியாளர் ரமேஷ், 2017ஆம் ஆண்டு குரூப் 2 தேர்வில் தேர்ச்சியாகி எரிசக்தி துறையில் உதவியாளராக பணியாற்றும் திருக்குமரன், முறைகேடாக தேர்வு எழுதி வெற்றிபெற்ற நிதீஷ்குமார் ஆகிய மூவரை கைது செய்தனர்.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: கைதானவர்களை ரெண்டு வாரம் ஜெயில்ல வைக்க நீதிமன்றம் உத்தரவு

இதையடுத்து, இடைத்தரகர் வெங்கட்ராமணன், பணம் கொடுத்து முறைகேடாக அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற திருவேல்முருகன், ராஜசேகர், காலேஷா ஆகிய 3 தேர்வர்கள், டிபிஐயில் ஆவண கிளார்க்காக பணிபுரிந்து வரும் ஓம்காந்தன், இடைத்தரகராக செயல்பட்ட பாலசுந்தர்ராஜ் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

ஏழு முறை ஃபெயிலானவர் எப்படி ஸ்டேட் ஃபஸ்ட் வர முடியும்? - சிபிசிஐடி ஷாக்!!

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் மூன்று பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் கைது எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள எரிசக்தி துறையில் பணியாற்றும் திருக்குமரன் என்பவர், குரூப் 2ஏ தேர்வை ராமேஸ்வரத்தில் உள்ள தேர்வு மையத்தில் எழுதியதும், தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் 37ஆவது இடத்தை அவர் பிடித்திருந்ததும் தெரியவந்துள்ளது. எனவே, 2017ஆம் ஆண்டில் தேர்வான இவரும் முறைகேடாக தேர்வாகியிருப்பாரோ என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி