ஆப்நகரம்

Tamil Nadu Assembly: தமிழகத்தில் புதிதாக 3 சட்டக் கல்லூரிகள் தொடங்கப்படும் - முதல்வர் பழனிசாமி!

புதிய சட்டக் கல்லூரிகள் தொடங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதேபோல் ஏற்கனவே உள்ள சட்டக்கல்லூரிகள் மேம்பாட்டிற்கும் நிதி ஒதுக்கியுள்ளார்.

Samayam Tamil 10 Jul 2019, 12:43 pm

ஹைலைட்ஸ்:

  • தமிழகத்திற்கு புதிதாக 3 சட்டக் கல்லூரிகள் தொடங்கப்படும்
  • விதி எண் 110ன் கீழ் முதல்வர் பழனிசாமி சட்டமன்றத்தில் அறிவிப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Palaniswami
தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர், கடந்த மாத இறுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வேலூர் மக்களவை தொகுதிக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளதால், சட்டமன்ற கூட்டத் தொடரை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக காலை, மாலை என இரு வேளைகளிலும் கூட்டம் நடைபெற்று வருகிறது. வழக்கம் போல் இன்று காலை 10 மணிக்கு சட்டமன்றம் கூடியது. முதலில் கேள்வி நேரம் நடைபெற்றது.

நீட் விவகாரம்: சிவி சண்முகம் பதவி விலக வேண்டும் - ஸ்டாலின் காட்டம்!

இதையடுத்து சமூக நலம், சத்துணவு திட்டத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இதில் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, அமைச்சர் சரோஜா பதில் அளித்து பேசுகிறார்.

இந்நிலையில் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டு பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் புதிதாக மூன்று சட்டக் கல்லூரிகள் தொடங்கப்படும். இதற்காக ரூ.9.58 கோடி ஒதுக்கப்படும்.

நளினி சிதம்பரத்தை விளாசிய அமைச்சர்...அமைதி காத்த திமுக!!

இந்த கல்லூரிகள் வரும் 2019-20 கல்வியாண்டு முதல் தொடங்கப்படும். திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரிக்கு ரூ.7.70 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.

ரூ.318 கோடி செலவில் 10,000 தடுப்பணைகள், ரூ.1,200 கோடி மதிப்பில் ஊரக சீரமைப்பு போன்றவை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் குமாரசாமி ஒப்புதல்!

ஏற்கனவே இருக்கும் சட்டக் கல்லூரிகள் உள்ள மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் புதிய சட்டக் கல்லூரிகள் அமைக்க திட்டமிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரத்தில் சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டது. இதற்கான சேர்க்கை நடைபெற்று, கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே 13 அரசு சட்டக் கல்லூரிகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி