ஆப்நகரம்

மானாமதுரையில் பரிதாபம்: மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!

சிவகங்கை மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக பலியாகியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 13 Aug 2017, 1:10 pm
சிவகங்கை மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக பலியாகியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil three persons of a same family died in a village near manamadurai in sivaganga district were electrocuted
மானாமதுரையில் பரிதாபம்: மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள பதினெட்டாம் கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வனிதா (33), சத்தியநாதன் மற்றும் பாப்பாத்தி. நேற்றிரவு மின்கம்பி ஒன்று அறுந்து வீட்டிற்குள் விழுந்துள்ளது. இதன் காரணமாக வீட்டின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனிதா உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் வராததால், வனிதா வீட்டு வாசலில் இருந்த மின்கம்பியில் இருந்து வீட்டிற்கு மின்சாரம் இணைப்பு கொடுப்பதற்கு முயற்சித்துள்ளார். அப்போது, வனிதா மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், சத்தியநாதன் மற்றும் பாப்பாத்தி இருவரும் அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். இந்நிலையில், 3 பேரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Three persons of a same family in a village near Manamadurai in Sivaganga district were electrocuted. A wire got snapped and fell inside the house's premises last night. One Vanitha,33, came in contact with electricity when she was trying to open iron grill gate in the morning. Two others, both in-laws, electrocuted while trying save her.

அடுத்த செய்தி