ஆப்நகரம்

பாலாற்றில் மரணக் குழிகள்... பறிபோன மூன்று உயிர்கள் !!

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுகுன்றம் அருகே பாலாற்றில் குளிக்க சென்ற மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 3 Nov 2019, 10:10 pm
காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே எடையத்தூர் கிராமத்தை சேர்ந்த இராமசாமி என்பவரது மகன் செல்வகுமார் (வயது 17). பாண்டூர் கிராமத்தில் பிளஸ் 2 படித்து வந்தார்.
Samayam Tamil pr.


இவர், இவரது தம்பி ரமேஷ், உறவினரின் மகன் யுகேஷ் (வயது 12 ) ஆகியோர் வீட்டின் அருகே உள்ள பாலாற்றில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மூன்று பேரும் சுழலில் சிக்கியுள்ளனர்.

இதில் செல்வகுமார், யுகேஷ் ஆகியோர் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ரமேஷின் அலறல் சத்தம் கேட்டு அவரை அருகில் இருந்த கிராம மக்கள் மீட்டனர்.

உயிரிழந்த செல்வகுமார், யுகேஷ் ஆகியோரின் உடலை மீட்ட திருக்கழுகுன்றம் தீயணைப்பு துறையினர், அவற்றLை உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து திருகழுக்குன்றம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பாலாற்றில் தொடர்ந்து நடைபெற்று வரும் மணல் திருட்டால், கடந்த வாரங்களில் பெய்த கனமழையின் காரணமாக அங்கங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

அதில் தண்ணீர் தேங்குவதை அறியாத சிறுவர்கள், பள்ளங்கள் இருப்பதை அறியாமல் அந்தப் பகுதிகளுக்கு குளிக்கச் செல்லும்போது ரண குழியில் விழுந்து பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.

அடுத்த செய்தி