ஆப்நகரம்

வேலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்!

வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அருகில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்ரு மோதிய விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Samayam Tamil 17 Feb 2019, 2:06 pm
வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அருகில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்ரு மோதிய விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Samayam Tamil accident


வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து நாட்றம்பள்ளி தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி பேருந்து ஆலங்காயம் நோக்கி சென்றது. அப்போது ஆலங்காயம் புலவர் பள்ளி செல்லும் ஏரிக்கரையின் அருகே ஆலாங்காயத்தைச் சேர்ந்த சிவா மற்றும் திருமலை இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.

அப்போது இருசக்கர வாகனம் கல்லூரி பேருந்து மீது நேருக்கு நேராக மோதியது. இதில் சிவா (24) சம்பவ இடத்திலேயே பலியானார். திருமலை படுகாயம் அடைந்தார் அதே நேரத்தில் பேருந்தின் பின்னால் ஆலங்காயம் நோக்கி வந்த மற்றொரு இருசக்கர வாகனமும் பேருந்தின் பின்பக்கமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நிர்மல் மற்றும் கல்யாணி ஆகியோர் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த ஆலங்காயம் காவல்துறையினர் படுகாயமடைந்த மூன்றுபேரையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துகுறித்து ஆலங்காயம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சிவாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் ஆலங்காயம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். ஒரே நேரத்தில் பேருந்தின் முன்பக்கமாகவும் பின்பக்கமாகவும் இருசக்கர வாகனம் மோதி ஒருவர் பலியானதும், திருமலை மற்றும் நிர்மல் ஆகிய இருவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

விபத்தில் இறந்தவர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அமைச்சர் நீலோபர் கபில் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

அடுத்த செய்தி