ஆப்நகரம்

புர்கா அணிந்து செயின் பறிக்க முயன்ற 3 பெண்களை பிடித்து போலீசில் ஒப்படைத்த பயணிகள்!

சென்னையை அடுத்த பம்மலில் ஓடும் பேருந்தில் புர்கா அணிந்து கொண்டு செயின் பறிக்க முயன்ற 3 பெண்களை பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Samayam Tamil 10 May 2019, 6:20 pm
சென்னையை அடுத்த பம்மலில் ஓடும் பேருந்தில் புர்கா அணிந்து கொண்டு செயின் பறிக்க முயன்ற 3 பெண்களை பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
Samayam Tamil WhatsApp Image 2019-05-10 at 09.57.49.


சென்னையை அடுத்த குரோம்பேட்டை நெமிலிச்சேரி பகுதியை சேரந்தவர் சசிகலா (37) நேற்றுஇரவு தாம்பரத்தில் இருந்து பூந்தமல்லி செல்லும் மாநகர பேருந்தில் ஸ்ரீபெரும்புதூர் செல்வதற்காக சென்று கொண்டிருந்தார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது முஸ்லிம் பெண்கள் போல புர்கா அணிந்து கொண்டு 3 பெண்கள் சசிகலாவை சுற்றி வளைத்தபடி நின்று கொண்டு பயணம் செய்தனர். அப்போது நைசாக சசிகலா கழுத்தில் இருந்த செயினை அறுக்க முயன்றனர். இதை கவனித்த சசிகலா குரல் கொடுத்து கத்தினார். அப்போது சக பயணிகள் சூழ்ந்து கொண்டு 3 பெண்களையும் கையும் களவுமாக பிடித்தனர்.

உடனே பேருந்தை பம்மல் போலீஸ் பூத்தில் நிறுத்தி 3 பெண்களையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். உடனே 3 பேரையும் பெண் சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் சங்கர் நகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 3 பேரும் தங்கள் ஊர் நாகர்கோவில் என கூறியுள்ளனர்.பஸ்களி் கூட்ட நெரிசலில் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்த்து.

இது தொடர்பாக போலீசார் 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தியபோது அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் விநாயகர் கோவில் தெருவை சேரந்த பிரியா (26), சங்கரம்மாள் (28), அபிராமி (25) என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் 2 அரை சவரன் செயினை பறிமுதல் செய்ததோடு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூட்ட நெரிசலில் முஸ்லிம் பெண்கள் போல புர்கா அணிந்து கொண்டு பெண் கொள்ளையர்கள் செயின் பறித்த சம்பவம் பம்மல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி