ஆப்நகரம்

ஸ்டாலின் Vs வேலுமணி: டீலா, நோ டீலா? உள்ளாட்சி தேர்தலுக்குள் ஒரு சம்பவம் இருக்கு!

ஊழல் புகார்கள் மீதான நடவடிக்கைகள் வேகமெடுக்கப்படுவதால் டீல் பேசும் முயற்சியில் எஸ்.பி.வேலுமணி தரப்பு இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 21 Jul 2021, 9:24 am
அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியல் தூசு தட்டப்படுகிறது என்ற தகவல் தமிழக அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது.
Samayam Tamil mk stalin sp velumani


திமுக எதிர்கட்சியாக இருந்தபோதே அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் மனு கொடுத்தார் ஸ்டாலின்.

ஆனால் ஆளுநர் எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. இந்த ஊழல் புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார். திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கந்தசாமி ஐபிஎஸ் கொண்டு வரப்பட்டார். ஒரு காலத்தில் அமித் ஷாவையே உள்ளே தள்ளிய இவரை கொண்டுவந்தது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியது.
10, 12ஆம் வகுப்பு: பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
கொரோனா பொதுமுடக்கம் அமலில் இருந்த நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருந்ததால் அதிமுக அமைச்சர்கள் மீது உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது திமுக ஆட்சிக்கு வந்து இரு மாதங்கள் முழுதாக முடிவடைந்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணைகள் வேகமெடுக்கின்றன.

மொத்தம் எட்டு அமைச்சர்களுக்கு கட்டம் கட்டப்படுவதாக சொல்லப்படும் நிலையில் எஸ்.பி.வேலுமணி, ராஜேந்திர பாலாஜி ஆகிய இருவரும் முன்னிலையில் உள்ளனர்.
எடப்பாடியின் வலது கரத்துக்கு வச்ச குறி: சிக்கப் போகும் எஸ்.பி.வேலுமணி?
கொங்கு மண்டலத்திலிருந்து அதிமுகவில் செல்வாக்கான நபர்களை தங்கள் கட்சிக்கு கொண்டு வரும் வேலையை செந்தில் பாலாஜி முன்னெடுத்து வருகிறார். இதனால் பிற அமைச்சர்கள், நிர்வாகிகளை விட எஸ்.பி.வேலுமணியை மட்டும் ஊழல் புகாரில் டார்கெட் செய்வதாக கூறப்படுகிறது. அதாவது மூன்று மாதங்களில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்றும் ஒரு தகவல் வந்தது.

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னர் எஸ்.பி.வேலுமணி கைது செய்யப்பட்டால் அது அதிமுகவுக்கு கொங்கு மண்டலத்தில் பின்னடைவாக இருக்கும் என்கிறார்கள். இதைக் காரணம் காட்டி மற்ற நிர்வாகிகளை தங்கள் பக்கம் கொண்டு வரவும் திமுக திட்டமிடுவதாகவும் கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
எடப்பாடிக்கே பயம் காட்டிய பாஜக: நான்கு திசைகளிலும் கண்டம்!
இந்த சூழலில் வேலுமணி தரப்பு வெள்ளைக் கொடி காட்டுவதாக கொங்கு மண்டலத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. வேலுமணியின் அண்ணன் தரப்பு ஒரு மீடியேட்டர் மூலம் திமுக தரப்பை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டாம் என டீல் பேசிவருவதாக கூறுகிறார்கள். என்ன மாதிரியான டீல் இது, இதற்கு திமுக தரப்பு என்ன சொல்லப் போகிறது, நடவடிக்கை எடுக்குமா, எடுக்காதா என்பது அடுத்த சில வாரங்களில் தெரிந்துவிடும் என்கிறார்கள்.

அடுத்த செய்தி