ஆப்நகரம்

தமிழகம், புதுவையில் இடி, சூறாவளி மழை: வானிலை மையம் எச்சரிக்கை!

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TOI Contributor 9 May 2017, 5:09 pm
சென்னை: வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil thunderstorm accompanied with gusty winds is likely to occur at isolated placesover in tamil nadu
தமிழகம், புதுவையில் இடி, சூறாவளி மழை: வானிலை மையம் எச்சரிக்கை!


தமிழகத்தின் சில மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அக்னி நட்சத்திரம் துவங்கிய பின் வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.

வேலூரின் திருப்பத்தூரில் (9 செ.மீ.,) நெல்லை, குமரி மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்து வருவதால் தண்ணீர் பஞ்சம் தீரும் என மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரி, கேரளாவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், பல இடங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thunderstorm accompanied with gusty winds is likely to occur at isolated placesover in Tamil Nadu.

அடுத்த செய்தி