ஆப்நகரம்

’வீழ்வேன் என நினைத்தாயோ’: மகாகவி பாரதியின் 137வது பிறந்தநாள்

மகாகவி பாரதியாருக்கு இன்று 137வது பிறந்த நாள் என்பதால் அவரை பற்றிய ஒரு நினைவுதொகுப்பே இந்த செய்தி.

Samayam Tamil 11 Dec 2018, 12:03 pm
மகாகவிபாரதியாருக்கு இன்று137வது பிறந்த நாள் என்பதால் அவரை பற்றிய ஒரு நினைவுதொகுப்பேஇந்த செய்தி.
Samayam Tamil op


தமிழ் கவிதைகளுக்குப் புதிய வடிவம் கொடுத்துஎளிமையாகஉருவாக்கி தனித்துவமான பாதையை அமைத்து தந்தவர் பாரதி. பிற இலக்கியம், உலகஇலக்கியம், நாட்டு நடப்பு,அரசியல் அறிவு என பரந்தஉலக பார்வையுடன் நுட்பமான திறன்களையும் பாரதி பெற்றிருந்தார். தொழில்நுட்ப வசதிகள் இல்லாதகாலத்திலும் கூட ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியை பற்றி ‘ஆகா வென்று எழுந்தது பார் யுகப் புரட்சி ' என்று எழுதியவர் .

பாரதியின் குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், பகவத் கீதை உரை போன்றவை அவரது அழியாப் புகழுக்குக் கட்டியம் கூறுகின்றன. கண்ணனை சிறுகுழந்தையாகவும் நண்பனாகவும், சேவகனாகவும் காதலியாகவும் குருவாகவும் வர்ணித்தவர் பாரதி

பாரதியின் பல பாடல்கள் இசை ராகத்துடன் இணைந்து எழுதப்பட்டவை என்பதால் திரைப்படப் பாடல்களாக இவை எப்போதும் ஒலித்துக்கொண்டுஇருக்கிறது. மேலும் எல்லா ராகத்திலும் அவரது வரிகளை பாட முடியும் என்பதே இதன் தனி சிறப்பு.

சுதந்திரப் போராட்டத்தில் பாரதியின் பாடல் வரிகள் புதிய எழுச்சியை ஏற்படுத்தின. இளைஞர்கள் அந்தப் பாடல்களைக் கேட்டு வீறுகொண்டு எழுந்தனர்.

பாரதியின் பிறந்த நாள் என்பது வெறும் ஒருசம்பிரதாயமான நினைவு கூரல் அல்ல; அது மகத்தான மனிதத்துவத்தின் கொண்டாட்டம். அவர் புரட்சியை கவிதைகளாக மட்டும் எழுதியவில்லை. அதன்படி வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்.

அடுத்த செய்தி