ஆப்நகரம்

அரசுப் பேருந்துகளிலும் வந்துவிட்டது paytm!!

அரசுப் பேருந்துகளில் Paytm மூலம் பயணக் கட்டணம் வசூலிக்கும் முறை பரிசோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 1 Jun 2020, 5:49 pm
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் நீங்கலாக, மாநிலத்தின் பிற மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் இன்று முதல் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.
Samayam Tamil paytm


இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசுப் பேருந்துகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும். பேருந்துகளில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும்.


இரு மாதங்களுக்குப் பின் தொடங்கிய பொது போக்குவரத்து!
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் உள்ள மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்பட்டதும், அங்கு பேருந்துகள் ஓடத் தொடங்கும்.

அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதியம் எதுவும் பிடித்தம் செய்யப்படவில்லை. இரண்டு அரசுப் பேருந்துகளில் பரிசோதனை முயற்சியாக Paytm மூலம் கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பேருந்து பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க முடிந்தவரை மின்னணு முறையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி