ஆப்நகரம்

பண்டிகை காலங்களில் கூடுதல் விலைக்கு ரயில் டிக்கெட்டுகள் விற்க ரயில்வேத்துறை அலோசனை!

பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட்டுகளை கூடிதல் விலையில் விற்பதற்கும் , மற்ற நாட்களில் சலுகை விலையில் விற்பனை செய்யவும் ரயில்வேத் துறை பரிசீலிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 25 Dec 2017, 10:33 am
பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட்டுகளை கூடிதல் விலையில் விற்பதற்கும் , மற்ற நாட்களில் சலுகை விலையில் விற்பனை செய்யவும் ரயில்வேத் துறை பரிசீலிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil ticket rate for the railway travel will be increased in festival season railway ministry discussing
பண்டிகை காலங்களில் கூடுதல் விலைக்கு ரயில் டிக்கெட்டுகள் விற்க ரயில்வேத்துறை அலோசனை!


தீபாவளி, கிஸ்துமஸ் , துர்கா பூஜை உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட்டுகளை ப்ரீமியம் விலைக்கு விற்கவும் , அதேபோல் சாதரண நாட்களில் சலுகை விலைகளில் விற்கவும் , கூட்டம் அதிகம் இல்லாத ரயில்களில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட சேவைகளின்போது பயணிகளுக்குச் சலுகைகள் அளிப்பது குறித்தும் மத்திய ரயில்வே வாரியம் ஆலோசனை செய்துவருகிறது.

இதுதொடர்பாக ரயில்வே வாரிய உயரதிகாரிகளுடன், ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கடந்தவாரம் ஆலோசனை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த முடிவு ரயில்வே அமைச்சகத்தின் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ரயில்வேத் துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தால், டிக்கெட்டுகளின் விலையில் அந்தந்த சீசனுக்கு ஏற்றார்போல் மாற்றம் இருக்கும் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக கிழக்கு, மேற்கு மற்றும் மேற்கு மத்திய ரயில்வே ஆகியவை தங்களது பரிந்துரைகளை ரயில்வே வாரியத்துக்கு அளித்துள்ளன.

அதில், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி மற்றும் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையிலான காலத்தில் குறிப்பிட்ட இடங்களை அடையும் ரயில்களில் சலுகைவிலையில் டிக்கெட்டுகளை விற்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், காலியாக உள்ள பெட்டிகளில் பயணிக்க டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கு முதல்கட்டமாக 10 முதல் 30 சதவிகிதம் வரையிலும் சலுகை வழங்கவும், பண்டிகை காலங்களில் கூடுதலாக 10 முதல் 20 சதவிகிதம் வரை கட்டணம் வசூலிக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

தீபாவளி, துர்கா பூஜை, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாள்கள், பயணிகள் அதிகம் பயணிக்கும் பண்டிகை நாள்களாக அந்தப் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இதுகுறித்த முடிவை ரயில்வேத் துறை வரும் 31-ம் தேதிக்குள் எடுக்கவிருப்பதாகவும் ரயில்வேத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி