ஆப்நகரம்

தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்திற்கு டிபன் கேரியர் சின்னம் ஒதுக்கீடு!

மக்களவை தேர்தலில் புதுச்சேரி உட்பட ஆறு பாராளுமன்ற தொகுதியில் தனித்து போட்டியிடும், தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்திற்கு டிபன் கேரியர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 22 Mar 2019, 10:23 am
மக்களவை தேர்தலில் புதுச்சேரி உட்பட ஆறு பாராளுமன்ற தொகுதியில் தனித்து போட்டியிடும், தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்திற்கு டிபன் கேரியர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்திற்கு டிபன் கேரியர் சின்னம் ஒதுக்கீடு!
தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்திற்கு டிபன் கேரியர் சின்னம் ஒதுக்கீடு!


கரூரில் தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தின் நிறுவன தலைவர் ஜோதிகுமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய உழவர் உழைப்பாளர் கழகம், தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகும். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, பொது சின்னம் கோரி விண்ணப்பித்து இருந்தோம். அந்தவகையில் தேர்தல் ஆணையம் எங்கள் கழகத்திற்கு டிபன் கேரியர் சின்னம் ஒதுக்கியுள்ளது.

விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் முன்னேற்றத்தை உறுதி செய்திடவும், விவசாயிகள் தற்கொலைகள் இல்லாத மாநிலமாக உருவாக்கவும் தமிழகத்தில் மக்கள் பணியாற்றுவோம்.

தமிழகத்தில் மீண்டும் விவசாய புரட்சியை உருவாக்க, தேசிய நதிநீர் இணைப்பை சாத்தியமாக்க டிபன் கேரியர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். மேலும் கரூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை வள மயமாக்க மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் உபரிநீர் விவசாயத்துக்கு பயன்படுத்தி வளமாக்குவோம்.

தமிழகத்தில் எங்கும் நீர்நிலைகளில் சாய கழிவுநீர் கலக்காமல் தடுத்திடுவோம். இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னுதாரணமாக தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தின் எம்.பிக்கள் செயல்பட உள்ளனர். மக்கள் எளிதில் அணுகக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினராக பாராளுமன்ற உறுப்பினர்கள் செயல்படுவார்கள் என தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தின் நிறுவன தலைவரும், கரூர் பாராளுமன்ற வேட்பாளருமான டாக்டர் ஜெ.ஜோதிகுமார் தெரிவித்தார்.

அடுத்த செய்தி